Note Details
TNPSC Tamil Ilakkanam – Marabu Sorkal | மரபுத் தமிழ்
மரபுத் தமிழ்: மரபு சொற்கள் மற்றும் மரபு தொடர்கள் குறித்து தமிழ்நாடு பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்புகளை வகுப்புகள் வாரியாக தொகுத்து கொடுத்துள்ளோம். புதிய மற்றும் பழைய என இரண்டு புத்தகங்களில் உள்ளவற்றையும் இங்கு கொடுத்துள்ளோம்.
அஃறிணைப் பொருள்களில் ஆண்பால் பெண்பாற் பெயர்கள்
அஃறிணைப் பெயர்களில் ஆண் பெண் பால்களைக் காட்டுவற்கு விகுதிகள் இல்லை. ஆண் மிருகத்தையும் பெண் மிருகத்தையும் தனித்தனி குறிக்கும் சொற்கள் சில உள்ளன. அவை
ஆண்பாற் பெயர்கள்
- கடுவன் – குரங்கு, பூனை
- மா – யானை, பன்றி, குதிரை
- ஒருத்தல் – கரடி, மான், யானை, எருமை, பன்றி, புலி, மரை
- போத்து – மரை, பசு, புலி, பூனை
- கலை – முசு மான்
- கவிறு – யானை, சுறவு, பன்றி
- சே – குதிரை, பெற்றம், புல்வாய்
- பகடு – எருமை, யானை, பெற்றம்
- உம்பல் – யானை
- ஏறு – பசு, எருமை, பன்றி, மான், மரை
- ஓரி – நரி, முசு
பெண்பாற் பெயர்கள்
- பிடி – யானை, கவரிமான், ஒட்டகம்
- பிணை – மான், நாய், பன்றி
- பெட்டை – ஒட்டகம், கழுதை, குதிரை, சிங்கம், மரை
- மந்தி – முசு, குரங்கு
- பிணா – புல்வாய், நாய், பன்றி
- ஆன் – எருமை, பசு, மரை
- நாகு – எருமை, பசு
- பாட்டி – நரி, பன்றி, நாய்
விலங்கின் பிள்ளை மரபுப் பெயர்கள்
- பறள், குருளை, குட்டி – புலி, முயல், வராகம், நரி, நாய்
- மறி – ஆடு, அழுங்கு, மான், குதிரை
- கன்று – கடமை, மான், எருது, பெற்றம்,ஒட்டகம், யானை, பரி, மரை, முதலை, கவரி
- குழவி – கடமை, மான், எருமை, யானை
- போதகம் – புலி, சிங்கம், யானை
- பறள், குட்டி, பிள்ளை – கீரி, பூனை, முயல், அணில்
தாவரங்களின் சினைகள் பற்றிய மரபுப் பெயர்கள்
குலைப்பெயர்:
- கொத்து – மா, புளி
- குலை – முந்திரி, ஈந்து
- கதிர் – நெல்,சோளம்
வித்துப் பெயர்:
- மிளகாய், கத்தரி: விதை,
நெல், சோளம்: மணி,
ஆமணக்கு, வேம்பு : முத்து,
பலா,மா: கொட்டை.
உள்ளீட்டுப் பெயர்:
- அரிசி – நெல், கரும்பு
- பருப்பு – அவரை, துவரை
- சதை – வாழை, மா
- சோறு – முருங்கை, கற்றாளை
5ஆம் வகுப்பு புதிய புத்தகம்
ஒலி மரபுச் சொற்கள்
- குரங்கு அலப்பும்
- புலி உறுமும்
- குயில் கூவும்
- யானை பிளிறும்
- ஆடு கத்தும்
- ஆந்தை அலறும்
- சிங்கம் கர்ச்சிக்கும், முழங்கும்
- மயில் அகவும்
- நாய் குரைக்கும்
- பாம்பு சீறும்
- சிங்கம் முழங்கும்
- அணில் கீச்சிடும்
- மயில் அகவும்
- குயில் கூவும்
- யானை பிளிறும்
- ஆந்தை அலறும்
- பூனை சீறும்
- எலி கீச்சிடும்
- காகம் கரையும்
- சேவல் கூவும்
- வண்டு முரலும்
- நாய் குரைக்கும்
விலங்குகளின் இளமைப்பெயர்
- ஆட்டுக் குட்டி
- யானைக் கன்று
- கோழிக் குஞ்சு
- சிங்கக் குருளை
- குதிரைக் குட்டி
- புலிப்பறழ்
- குரங்குக் குட்டி
- கீரிப் பிள்ளை
- மான் கன்று
- அணிற்பிள்ளை
வினைமரபுச் சொற்கள்
- அம்பு எய்தார்
- ஆடை நெய்தார்
- பூ பறித்தாள்
- மாத்திரை விழுங்கினான்
- நீர் குடித்தான்
- சோறு உண்டான்
- கூடை முடைந்தார்
- சுவர் எழுப்பினார்
- முறுக்கு தின்றாள்
- பால் பருகினான்
- பூ பறித்தாள்
- நீர் குடித்தான்
- முறுக்கு தின்றான்
- உணவு உண்டான்
7ஆம் வகுப்பு பழைய புத்தகம்
இளமைப்பெயர்கள்
தாவரங்கள்: காய்களின் இளமை மரபு
- அவரைப்பிஞ்சு
- முருங்கைப்பிஞ்சு
- கத்தரிப்பிஞ்சு
- வாழைக்கச்சல்
- வெள்ளரிப்பிஞ்சு
- கொய்யாப்பிஞ்சு
- பலாமூசு
- தென்னங்குரும்பை
- மாவடு
விலங்குகள்: இளமை மரபு
- குருவிக்குஞ்சு
- கோழிக்குஞ்சு
- ஆட்டுக்குட்டி
- கழுதைக்குட்டி
- எருமைக்கன்று
- குதிரைக்குட்டி
- பன்றிக்குட்டி
- குரங்குக்குட்டி
- நாய்க்குட்டி
- பூனைக்குட்டி
- மான்கன்று
- யானைக்கன்று
- சிங்கக்குருளை
- புலிப்பறழ்
- கீரிப்பிள்ளை
ஒலி மரபுச்சொற்கள்
- குயில் கூவும்
- மயில் அகவும்
- சேவல் கூவும்
- காகம் கரையும்
- கிளி கொஞ்சும்
- கூகை குழறும்
- வானம்பாடி பாடும்
- ஆந்தை அலறும்
- கோழி கொக்கரிக்கும்
- குதிரை கனைக்கும்
- சிங்கம் முழங்கும் (கர்ச்சிக்கும்)
- நரி ஊளையிடும்
- நாய் குரைக்கும்
- பன்றி உறுமும்
- யானை பிளிறும்
வினை மரபுச்சொற்கள்
- அப்பம் தின்
- காய்கறி அரி
- இலை பறி
- நெல் தூற்று
- களை பறி
- பழம் தினம்
- நீர் பாய்ச்சு
- பாட்டும் பாடு
- மலர் கொய்
- கிளையை ஒடி
- மரம் வெட்டு
- விதையை விதை
- நாற்று நடு
- படம் வரை
- கட்டுரை எழுது
- தீ மூட்டு
- விளக்கேற்று
- உணவு உண்
பொருத்துக
| 1. காகம் | கூவும் |
| 2. குதிரை | கரையும் |
| 3. சிங்கம் | கனைக்கும் |
| 4. நரி | முழங்கும் |
| 5. குயில் | ஊளையிடும் |
| விடை: 2, 3, 4, 5, 1 | |
8ம் வகுப்பு புதிய புத்தகம்
பறவைகளின் ஒலிமரபு
- ஆந்தை அலறும்
- குயில் கூவும்
- காகம் கரையும்
- கோழி கொக்கரிக்கும்
- சேவல் கூவும்
- புறா குனுகும்
- மயில் அகவும்
- கூகை குழறும்
- கிளி பேசும்
பொருட்களின் தொகை மரபு
- மக்கள் கூட்டம்
- ஆநிரை
- ஆட்டு மந்தை
வினை மரபு
- சோறு உண்
- தண்ணீர் குடி
- முறுக்குத் தின்
- பால் பருகு
- சுவர் எழுப்பு
- கூடை முடை
- பூக் கொய்
- பானை வனை
- இலை பறி
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி __________ (கூவும்/கொக்கரிக்கும்)
விடை: கொக்கரிக்கும்
2. பால் __________ . (குடி/ பருகு)
விடை: பருகு
3. சோறு __________ . (தின்/உண்)
விடை: உண்
4. பூ __________ . (கொய்/பறி)
விடை: கொய்
5. ஆ __________ (நிரை/மந்தை)
விடை: நிரை
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
விடை :
சேவல் கூவும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூக்கொய்ய நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக் கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலை பருகி விட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
இளமைப் பெயர்கள்
- புலி பறழ்
- சிங்கம் குருளை
- யானை கன்று
- பசு கன்று
- கரடி குட்டி
ஒலி மரபு
- புலி உறுமும்
- சிங்கம் முழங்கும்
- யானை பிளிறும்
- பசு கதறும்
- கரடி கத்தும்
8ஆம் வகுப்பு பழைய புத்தகம்
இளமைப்பெயர்கள்
- அணிற்பிள்ளை
- கீரிப்பிள்ளை
- பன்றிக்குட்டி
- ஆட்டுக்குட்டி
- குதிரைக்குட்டி
- புலிப்பறழ்
- எருமைக்கன்று
- சிங்கக்குருளை
- பூனைக்குட்டி
- எலிக்குஞ்சு
- நாய்க்குட்டி
- மான்கன்று
- கழுதைக்குட்டி
- குரங்குக்குட்டி
- யானைக்கன்று
விலங்குகளின் வாழிடங்கள்
- ஆட்டுப்பட்டி
- கோழிப்பண்ணை
- யானைக்கூடம்
- குதிரைக்கொட்டில்
- மாட்டுத்தொழுவம்
- வாத்துப்பண்ணை
விலங்கு பறவை இனங்களின் ஒலிமரபு
- ஆந்தை அலறும்
- குதிரை கனைக்கும்
- நரி ஊளையிடும்
- கழுதை கத்தும்
- குயிர் கூவும்
- புலி உறுமும்
- காக்கை கரையும்
- கோழி கொக்கரிக்கும்
- மயில் அகவும்
- கிளி கொஞ்சும்
- சிங்கம் முழங்கும்
- யானை பிளிறும்
தாவர உறுப்புப் பெயர்கள்
- ஈச்ச ஓலை
- தாழை மடல்
- பனையோலை
- சோளத்தட்டை
- தென்னையோலை
- பலா இலை
- மாவிலை
- மூங்கில் இலை
- வாழை இலை
- வேப்பந்தழை
- கமுகங்கூந்தல்
- நெற்றாள்
காய்களின் இளநிலை
- அவரைப்பிஞ்சு
- மாவடு
- முருங்கைப்பிஞ்சு
- தென்னங்குரும்பை
- வாழைக்கச்சல்
- வெள்ளரிப்பிஞ்சு
செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்
- ஆலங்காடு
- சவுக்குத்தோப்பு
- தென்னந்தோப்பு
- கம்பங்கொல்லை
- சோளக்கொல்லை
- தேயிலைத்தோட்டம்
- பனந்தோப்பு
- பலாத்தோப்பு
- பூஞ்சோலை
பொருள்களின் தொகுப்பு
- ஆட்டுமந்தை
- கற்குவியல்
- சாவிக்கொத்து
- திராட்சைக்குலை
- வேலங்காடு
- பசுநிரை
- மாட்டுமந்தை
- யானைக்கூட்டம்
- வைக்கோற்போர
பொருளுகேற்ற வினை மரபு
- சோறு உண்
- நீர் குடி
- பால் பருகு
- பழம் தின்
- பாட்டுப்பாடு
- கவிதை இயற்று
- கோலம் இடு
- தயிர் கடை
- விளக்கை ஏற்று
- தீ மூட்டு
- படம் வரை
- கூரை வேய்
இளமைப்பெயர்களை எழுதுகு
- (அ) கீரி – பிள்ளை
- (ஆ) மான் – கன்று
- (இ) சிங்கம் – குருளை
- (ஈ) பூனை – குட்டி
- (உ) எருமை – கன்று
பொருத்துக
| 1. மக்கள் | போர் |
| 2. வீரர் | கற்றை |
| 3. விறகு | கூட்டம் |
| 4. சுள்ளி | கட்டு |
| 5. வைக்கோல் | படை |
| விடை: 3, 5, 4, 2, 1 | |
10ஆம் வகுப்பு பழைய புத்தகம்
பொருத்துக
| 1. ஆடு | கன்று |
| 2. மான் | பிள்ளை |
| 3. கீரி | குட்டி |
| 4. சிங்கம் | குஞ்சு |
| 5. கோழி | குருளை |
| விடை: 3, 1, 2, 5, 4 | |
ஒலி மரபு
- ஆடு கத்தும்
- எருது எக்காளமிடும்
- குதிரை கனைக்கும்
- குரங்கு அலப்பும்
- சிங்கம் முழங்கும்
- நரி ஊளையிடும்
- புலி உறுமும்
- பூனை சீறும்
- யானை பிளிறும்
- எலி கீச்சிடுமு்
- ஆந்தை அலறும்
- கிளி பேசும்
- காகம் கரையும்
- குயிர் கூவும்
- கூகை குழறும்
- கோழி கொக்கரிக்கும்
- சேவல் கூவும்
- புறா குனுகும்
- மயில் அகவும்
- வண்டு முரலும்
வினை மரபு
- அம்பு எய்தார்
- ஆடை நெய்தார்
- உமி கருக்கினான்
- ஓவியம் புனைந்தான்
- கூடை முடைந்தான்
- சுவர் எழுப்பினான்
- செய்யுள் இயற்றினான்
- சோறு உண்டான்
- தண்ணீர் குடித்தான்
- பால் பருகினான்
- பூப் பறித்தாள்
- மரம் வெட்டினான்
- மாத்திரை விழுங்கினான்
- முறுக்குத் தின்றான்
பொருத்துக
| 1. மயில் | கரையம் |
| 2. கூகை | கத்தும் |
| 3. யானை | அலறும் |
| 4. காகம் | அகவும் |
| 5. ஆடு | பிளிறும் |
| விடை: 4, 3, 5, 1, 2 | |